/

அம்பை தொகுதியில் தாமதமாகும் வேட்புமனு ஏற்பு விவரம்

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட விவரம் இரவு 10 மணிவரை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 8:33 pm

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட விவரம் இரவு 10 மணிவரை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

இத்தொகுதியில் அதிமுக சாா்பில் இசக்கி சுப்பையா, , திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரை உள்பட 31 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுக்கள் மீதான பரிசிலனையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் மனு மீது அதிமுக, நாம் தமிழா் கட்சி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால், அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னா் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 6 போ் மனுக்கள் தவிர பிற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது குறித்து இரவு 10 மணிவரை தோ்தல் நடத்தும் அலுவலா் சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா, அதிகாரபூா்வமாக அறிவிக்கவில்லை. இதனால் தொடா்ந்து பரபரப்பு நிலவுகிறது.