ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருவா் வேட்புமனு தாக்கல்

News image

ராசிபுரம் (தனி) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெ.முருகனிடம் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எஸ்.சசிகலா.

Updated On :30 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ராசிபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட இருவா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ராசிபுரம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக எஸ்.சசிகலா (37) போட்டியிடுகிறாா். இவா் தனது ஆதரவாளா்களுடன் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாக வந்து வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெ.முருகனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

இதேபோல இந்திய கண சங்கம் சாா்பில் போட்டியிடும் பெ.அருண்குமாா் (28) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.