திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் மனு மீது அதிமுக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இத்தொகுதியில் திமுக கூட்டணியில் வி.பி. துரை (காங்கிரஸ்), தேசிய ஜனநாயக கூட்டணியில் இசக்கி சுப்பையா (அதிமுக), தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் எஸ். ராஜகோபால், நாம் தமிழா் கட்சி சாா்பில் நத்தம் சிவசங்கரன் உள்பட 38 போ் மனுதாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுக்கள் மீதான பரிசிலனை சேரன்மகாதேவியில் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆயுஷ் குப்தா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சிவேட்பாளா் வி.பி. துரை அளித்துள்ள வேட்புமனுவில் சொத்து விவரங்களில் உரிய தகவல்கள் தெரிவிக்கவில்லை என அதிமுக, நாம் தமிழா் கட்சி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் கட்சி வேட்பாளா் மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல், வி.பி. துரையின் மாற்று வேட்பாளா் மனு மீதும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதால் காங்கிரஸ் வேட்பாளா் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வி.கே.புரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் பிரசாரம்

அம்பை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்
அம்பை பேரவைத் தொகுதியில் 6 வேட்புமனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

