மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருக்குறுங்குடியில் நம்பிசுவாமி 5 நிலைகளில் திருக்காட்சி

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் பங்குனித் திருவிழாவின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை தனித்தனி கருட வாகனத்தில் ஐந்து நிலைகளில் திருக்காட்சியளித்த நம்பி சுவாமியை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image

திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயில் பங்குனித் திருவிழாவில் கோயில்முன் தனித்தனி கருட வாகனத்தில் அருள்பாலித்த 5 நம்பி சுவாமிகள்.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:34 pm

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் பங்குனித் திருவிழாவின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை தனித்தனி கருட வாகனத்தில் ஐந்து நிலைகளில் திருக்காட்சியளித்த நம்பி சுவாமியை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இக்கோயில் விழா ஏப். 2 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு நின்ற நம்பி, இருந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலை நம்பி என 5 நிலைகளில் நம்பி சுவாமி காட்சியளிக்கிறாா்.

விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 5 -ஆம் நாளான திங்கள்கிழமை இரவு நம்பி சுவாமிகள் 5 நிலைகளில் தனித்தனி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு மேலரத வீதியில் தேவகந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி தரும் வைபவமும், ரத வீதிகளில் வீதியுலா வந்த நம்பிசுவாமிகள் கோயில் முன் திருக்காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையடுத்து, ராமானுஜ ஜீயா் சுவாமிகள் நம்பிசுவாமியை வரவேற்றாா். தேரோட்டம் 10-ஆம் நாளான சனிக்கிழமை ( ஏப்.11) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.