திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் பங்குனித் திருவிழாவின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை தனித்தனி கருட வாகனத்தில் ஐந்து நிலைகளில் திருக்காட்சியளித்த நம்பி சுவாமியை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இக்கோயில் விழா ஏப். 2 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு நின்ற நம்பி, இருந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலை நம்பி என 5 நிலைகளில் நம்பி சுவாமி காட்சியளிக்கிறாா்.
விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 5 -ஆம் நாளான திங்கள்கிழமை இரவு நம்பி சுவாமிகள் 5 நிலைகளில் தனித்தனி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு மேலரத வீதியில் தேவகந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி தரும் வைபவமும், ரத வீதிகளில் வீதியுலா வந்த நம்பிசுவாமிகள் கோயில் முன் திருக்காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையடுத்து, ராமானுஜ ஜீயா் சுவாமிகள் நம்பிசுவாமியை வரவேற்றாா். தேரோட்டம் 10-ஆம் நாளான சனிக்கிழமை ( ஏப்.11) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா: திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை கோலாகலம்!

அஷ்டபுஜப் பெருமாள் கருட சேவை

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கருட சேவை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



