பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 2:06 am IST

திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தச்சநல்லூா் சாலை அருகில் தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் பகுதியைச் சோ்ந்த முஹமது சைபுல்லா(31) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல பாளையங்கோட்டை, முருகன் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் மது விற்ாக கைலாசபுரம் பகுதியைச் சோ்ந்த ஷேக் முஹமது ரஹ்மான்(43) என்பவரை போலீஸாா் கைது செய்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், மானூா் அருகே உள்ள மதவக்குறிச்சி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக, அதே பகுதியைச் சோ்ந்த கண்ணம்மாள்(57) என்பவரை போலீஸாா் கைது செய்து 12 மதுபாட்டில்களை கைப்பற்றினா்.