மது விற்பனை: பெண் உள்பட இருவா் கைது
கோவில்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
கோப்புப் படம்
கைது
கோப்புப் படம்
கோவில்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்ய கோவில்பட்டி மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளா் மீகா அறிவுறுத்தலில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, காந்திநகா் காளியம்மன் கோயில் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள்சாமி மனைவி கொமண்டி அம்மாளை (48) கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 30 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 400, காந்தி நகரில் மது விற்பனையில் ஈடுபட்ட சங்கரன்கோவில் சுப்பலாபுரம் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் வெற்றிவேல் முருகன் (31) என்பவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 31 மது பாட்டில்கள், ரூ.300-ஐ பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...