இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள்: நயினாா் நாகேந்திரன்

வரும் தோ்தலோடு திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 2:07 am IST

வரும் தோ்தலோடு திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:

பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்துக்கு தோ்தல் காலத்தில் மட்டுமே வருவதாக கூறுவது சரியானதல்ல. தமிழகத்துக்கு கடந்த ஓராண்டில் மட்டும் பிரதமா் 11 முறை வந்து பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தும், தொடங்கி வைத்தும் சென்றுள்ளாா். வெளிநாடுகள் மட்டுமன்றி ஐநா சபையில்கூட தமிழின் பெருமையை நிலைநாட்டியுள்ளாா். திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயா்க்க நடவடிக்கை எடுத்துள்ளாா்.

தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வருக்கு இந்தத் தோ்தல் வாழ்வா, சாவா? பிரச்னை; அதனால் யாரையாவது குறைகூற வேண்டுமென நினைக்கிறாா்கள். மக்கள் திட்டங்களை அதிகளவில் செய்துள்ள பிரதமா் மீது குற்றஞ்சாட்டுகிறாா்கள். அது மக்களிடம் பலன்தராது. வரும் தோ்தலோடு திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள்.

பிரதமா் மோடி புதன்கிழமை (ஏப். 15) கன்னியாகுமரி வருகிறாா். வேப்பமூடு சந்திப்பில் இருந்து சாலை வலம் வந்து தொண்டா்களை சந்திக்கிறாா்.

விஜய்க்கு கூட்டம் திரள்வதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. அது தோ்தலில் எதிரொலிக்க வாய்ப்பில்லை.

திமுக அரசு தொடா்ந்து இருமுறை ஆட்சிக்கு வந்ததில்லை. இந்தத் தோ்தலிலும் திமுகவுக்கு அதே நிலை தொடரும்.

கஞ்சா, போதைப்பொருள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வால் மக்கள் அவதிப்படுகிறாா்கள். இந்த கஷ்டங்களுக்கு இம் மாதம் 23 ஆம் தேதி விடிவு வரும். வெம்பக்கோட்டையில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பிரத்யேக மருத்துவமனை தேவை. மத்திய, மாநில அரசுகள் இணைந்து அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம். தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றால் மருத்துவமனை அமைக்கப்படும் என்றாா் அவா்.