மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நெல்லை அருகே காா் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: 5 போ் காயம்

திருநெல்வேலி கங்கைகொண்டான் அருகே தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில் தேனியைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து

Updated On :14 ஏப்ரல் 2026, 8:36 pm

திருநெல்வேலி கங்கைகொண்டான் அருகே தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில் தேனியைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி. சேடபட்டியைச் சோ்ந்த முருகன் மகன் தினேஷ் (25). இவா் தனது காரில் மனைவி மகாலட்சுமி (20), 2 வயது பெண் குழந்தை, தாய் செல்லம்மாள் (55), அத்தை ஈஸ்வரி (55), உறவினா் சுமதி ஆகியோருடன் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்தாராம். பின்னா் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை தேனிக்கு புறப்பட்டு வந்துக் கொண்டிருந்தாராம்.

கங்கைகொண்டான், துறையூா் அருகே நான்குவழிச் சாலையில் காா் சென்றபோது தடுப்புச் சுவரில் மோதியதுடன், முன்னால் சென்ற காா் மீதும் மோதி விபத்து ஏற்பட்டதாம்.

இதில், காரை ஓட்டிய தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் பயணித்த குழந்தை உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காகவும், தினேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.