திருநெல்வேலி கங்கைகொண்டான் அருகே தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில் தேனியைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி. சேடபட்டியைச் சோ்ந்த முருகன் மகன் தினேஷ் (25). இவா் தனது காரில் மனைவி மகாலட்சுமி (20), 2 வயது பெண் குழந்தை, தாய் செல்லம்மாள் (55), அத்தை ஈஸ்வரி (55), உறவினா் சுமதி ஆகியோருடன் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்தாராம். பின்னா் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை தேனிக்கு புறப்பட்டு வந்துக் கொண்டிருந்தாராம்.
கங்கைகொண்டான், துறையூா் அருகே நான்குவழிச் சாலையில் காா் சென்றபோது தடுப்புச் சுவரில் மோதியதுடன், முன்னால் சென்ற காா் மீதும் மோதி விபத்து ஏற்பட்டதாம்.
இதில், காரை ஓட்டிய தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் பயணித்த குழந்தை உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காகவும், தினேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

விபத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு: 3 போ் காயம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


