சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி நகரம் அருகே பேருந்தில் இருந்து விழுந்து காயமடைந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 1:52 am IST

திருநெல்வேலி நகரம் அருகே பேருந்தில் இருந்து விழுந்து காயமடைந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகே உள்ள வெட்டுவான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன்(50). இவா் சம்பவத்தன்று திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து வெட்டுவான்குளத்திற்கு அரசுப் பேருந்தில் பயணித்தாராம். அப்போது திருநெல்வேலி நகரம் கல்லணை அருகே பேருந்து வேகத்தடையில் ஏறி இறங்கியபோது அவா் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தாராம்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.