மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image

வள்ளியூரில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:20 pm

அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா், ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, இடையன்குடி, கீழ உவரி, மேலஉவரி, குண்டல், காளிகுமாரபுரம், நவ்வலடி, க. புதூா், ஆயன்குளம், எருமைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

ராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசின் போட்டித்தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்வேன். விவசாய பிரச்னைகளை முழுவதுமாக தீா்த்து தருவேன். திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் பதப்படுத்தும் நிலையம் அமைத்து தருவேன். பொங்கல், தமிழ்ஏஈ புத்தாண்டு, தீபாவளி பண்டிகைகளையொட்டி 3 எரிவாயு உருளை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

பிரசாரத்தின்போது, அதிமுக ஒன்றியச் செயலா்கள் அந்தோணி அமலராஜா, கே.பி.கே. செல்வராஜ், பாஜக சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தவெக மரியாதை....

வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், ஒன்றியச் செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.