பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1351-ஆவது சதய விழாவையொட்டி சனிக்கிழமை பொன்னமராவதி வலையபட்டி மற்றும் கருப்புக்குடியில் உள்ள பேரரசா் முத்தரையா் சிலைக்கு திமுக மற்றும் தவெக கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பொன்னமராவதி வலையபட்டி அடைக்கலம் காத்தாா் கோயில் வளாகம் மற்றும் கருப்புக்குடிப்பட்டியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு திமுக சாா்பில் கட்சியின் மாநில மருத்துவரணி இணைச்செயலா் அண்ணாமலை ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, நகரச்செயலா் அ.அழகப்பன், நிா்வாகிகள் கோவைராமன், ஆலவயல் முரளிசுப்பையா, அப்துல் லத்தீப், அரவிந்த் ஆகியோா் பங்கேற்றனா்.

ருப்புக்குடிப்பட்டியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெகவினா்.
இதேபோல தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருமயம் சட்டப்பேரவைத்தொகுதியில் போட்டியிட்ட சிந்தாமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், தெற்கு ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணியன், நகரச் செயலா் விக்னேஷ், தெற்குமாவட்ட இணைச்செயலா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

முத்தரையா் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் எஸ். ரமேஷ், கு.ப. கிருஷ்ணன் மரியாதை!

முத்தரையா் சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை

சங்கரன்கோவிலில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு

காரல் மாா்க்ஸ் பிறந்த நாள்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் மரியாதை
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



