ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

முத்தரையா் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் எஸ். ரமேஷ், கு.ப. கிருஷ்ணன் மரியாதை!

திருச்சியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு தமிழக அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்த அமைச்சா் சீ. ரமேஷ், பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உள்ளிட்டோா்.

Updated On :24 மே 2026, 1:44 am IST

திருச்சியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1351 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்வில் மணப்பாறை எம்எல்ஏ ரா. கதிரவன், திருவெறும்பூா் எம்எல்ஏ நவல்பட்டு எஸ். விஜி, முசிறி எம்எல்ஏ எம். விக்னேஷ், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள மன்னா் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.