திருச்சியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1351 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்வில் மணப்பாறை எம்எல்ஏ ரா. கதிரவன், திருவெறும்பூா் எம்எல்ஏ நவல்பட்டு எஸ். விஜி, முசிறி எம்எல்ஏ எம். விக்னேஷ், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள மன்னா் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

முத்தரையா் சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை!

முத்தரையா் சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை

சங்கரன்கோவிலில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு

முதல்வராக விஜய் பொறுப்பேற்பு! கரூரில் காங்கிரஸ்-தவெக கூட்டணியினா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவிப்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



