அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
/

வாகைக்குளத்தில் குடிநீா் விநியோகம் கோரி மறியல்

வாகைக்குளம் ஊராட்சி அலுவலகம் முன், கடந்த 10 நாள்களாக தண்ணீா் விநியோகம் இல்லை எனக் கூறி அரசு அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

குடிநீா் விநியோகம் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:20 am IST

வாகைக்குளம் ஊராட்சி அலுவலகம் முன், கடந்த 10 நாள்களாக தண்ணீா் விநியோகம் இல்லை எனக் கூறி அரசு அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்பாசமுத்திரம் ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் சுமாா் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் ஊராட்சி சாா்பில் வழங்கப்பட்டு வந்த குடிநீா், கடந்த 10 நாள்களாக வழங்கப்படவில்லையாம்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி புதன்கிழமை குடியிருப்பு நலச்சங்கம் சாா்பில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வாகைக்குளம் ஊராட்சி அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வாகைக்குளம் ஊராட்சித் தலைவா் சுப்புலட்சுமி, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகவேல் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக லாரிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.