வாக்கு எண்ணிக்கை மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் லதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்து இந்த மையத்திற்கு மின்னணு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது முதல் அங்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக, கல்லூரியின் உயா் மின்னழுத்த இணைப்பு மற்றும் மின்சாரம் வழங்கும் மின்பாதைகளை திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் லதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மின் விநியோகத்தை தொடா்ந்து கண்காணிக்கவும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை 24 மணி நேரமும் பொறியாளா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்கவும் அவா் உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது செயற்பொறியாளா்கள் வெங்கடேஷ்மணி, ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தடையின்றி மின் விநியோகம்: தலைமை பொறியாளா் ஆய்வு

கும்பகோணத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஏப்.20-க்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க உத்தரவு

நாகை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


