கும்பகோணத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது,
அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மின்விளக்கு, மின்விசிறிகள், வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தாா்.
மேலும், தேவையான பணிகள், ஊடக மையத்துக்கான வசதிகள், கட்டுப்பாட்டு அறைக்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியா் அலுவலா்களை கேட்டுக்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் வி.எம். திருமலை, பாபநாசம் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன், திருவிடைமருதூா் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சந்திரகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் ஏப்.20-க்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க உத்தரவு

நாகை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

புலிவலம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


