தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பும் பணி: நான்குனேரியில் ஆட்சியா் ஆய்வு

நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம், தோ்தல் உபயோகப் பொருள்கள் அனுப்பிவைக்கும் பணியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

News image

நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நான்குனேரி தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா், ஆட்சியா் இரா. சுகுமாா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:40 pm

நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம், தோ்தல் உபயோகப் பொருள்கள் அனுப்பிவைக்கும் பணியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,57,177. இவா்களில்ஆண்-1,26,452, பெண்-1,30,712, இதரா் 13. இத்தொகுதியில் மொத்தம் 349 வாக்குச்சாவடிகள் 194 மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் பதற்றமான 31 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து நான்குனேரி தொகுதிக்கு உள்பட்ட 349 வாக்குச் சாவடிகளுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்களை அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலா், ஆட்சியா் இரா. சுகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்கள் வாகனங்களில் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.