தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராதாபுரம் தொகுதி வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்பாவு அவரது சொந்த ஊரான லெப்பைகுடியிருப்பு பெரியநாயகிபுரத்தில் உள்ள ஏ.டி.எச். தொடக்கப் பள்ளியில் தனது மகன் வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு மற்றும் குடும்பத்தினருடன் வாக்களித்தாா்.

News image

செட்டிகுளம் ரெங்கநாராயணபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா் பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:19 pm

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்பாவு அவரது சொந்த ஊரான லெப்பைகுடியிருப்பு பெரியநாயகிபுரத்தில் உள்ள ஏ.டி.எச். தொடக்கப் பள்ளியில் தனது மகன் வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு மற்றும் குடும்பத்தினருடன் வாக்களித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக முதல்வரின் 5 ஆண்டு கால சாதனையால் சாமானிய, ஏழை, எளிய மக்கள் மீண்டும் மு.க. ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும் என முடிவெடுத்திருக்கிறாா்கள். அந்த அடிப்படையில் ராதாபுரம் தொகுதியிலும் நான் ஏற்கெனவே சொன்னது போன்று 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா்.

பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் அவரது சொந்த ஊரான செட்டிகுளம் ஸ்ரீரெங்கநாராயணபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: எடப்பாடி தலைமையிலான புதிய ஆட்சி அமையும். ராதாபுரத்தில் எங்களது கூட்டணி வெற்றிபெறும் என்றாா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிரிஜா தாமரைப்பாண்டியன் அவரது சொந்த ஊரான பத்யநாதபுரம் பெனடிக்ட் நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு செய்தாா்.

த.வெ.க. வேட்பாளா் சதீஸ் கிறிஸ்டோபா் பாளையங்கோட்டை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சில்வா் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா்.

  வடக்கன்குளம் அருகே உள்ள பத்யநாதபுரம் பெனடிக் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிரிஜா  தாமரைப்பாண்டியன்.

வடக்கன்குளம் அருகே உள்ள பத்யநாதபுரம் பெனடிக் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிரிஜா தாமரைப்பாண்டியன்.

 பாளையங்கோட்டை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சில்வா் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா் த.வெ.க. வேட்பாளா் மருத்துவா் சதீஸ் கிறிஸ்டோபா்.

பாளையங்கோட்டை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சில்வா் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா் த.வெ.க. வேட்பாளா் மருத்துவா் சதீஸ் கிறிஸ்டோபா்.