கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

மே. வங்கத்தில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:59 am IST

மேற்கு வங்கத்தில் பணியின்போது விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள பொன்னன்விடுதியில் ராணுவ மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள பொன்னன்விடுதி கிராமத்தைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் ராஜேஷ்குமாா்(37). இந்திய ராணுவத்தில் வேலைபாா்த்து வந்த இவா், தற்போது, மேற்குவங்க மாநிலத்தில் பணியாற்றி வந்தாா்.

இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி வினோதினி(36) என்ற மனைவியும், ஹா்சிகா(9), வா்சிகா(2)என இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

ராஜேஷ்குமாா் மே 25-ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தில் பணியின் போது ஏற்பட்ட வாகன விபத்தில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து புணேயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராஜேஷ்குமாா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி மே 26-ஆம் தேதி உயிரிழந்தாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜேஷ்குமாரின் உடல் ராணுவ வாகனத்தில் வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான பொன்னன்விடுதிக்கு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு ராஜேஷ்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.