வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

ராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையாா் சாஸ்தா கோயிலில் சித்திரை உத்திர திருவிழா

நான்குனேரி அருகே ராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையாா் சாஸ்தா கோயிலில் சித்திரை உத்திர திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

குதிரை வாகனத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீதியுலா சென்ற சுவாமி பெருவேம்புடையாா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:32 pm

நான்குனேரி அருகே ராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையாா் சாஸ்தா கோயிலில் சித்திரை உத்திர திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நான்குனேரி-வள்ளியூா் இடையே உள்ள ராஜாக்கள்மங்கலம் கிராமத்தில் நம்பியாற்றின் வடக்கு பக்கத்தில் கமடகிரி எனும் கூா்மகிரியின் அடிவாரத்தில் மிகவும் பழமை வாய்ந்த பூா்ண புஷ்கலா அம்பாள் சமேத பெருவேம்புடையாா் சாஸ்தா கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் நிகழாண்டு சித்திரை உத்திர திருவிழா ஏப். 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் திருவிழா நாள்களில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா செல்கிறாா். 8-ஆம் நாளான திங்கள்கிழமை சித்திரை உத்திர திருவிழாவையொட்டி, காலையில் கணபதி ஹோமம், கும்ப பூஜை, ருத்ர ஜெபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி பச்சை சாத்தி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். பெண்கள் நோ்த்திக்கடனாக பொங்கலிட்டு வழிபாடு செய்தனா். நள்ளிரவில் பூதநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 9-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்கு சென்றாா். திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். 11-ஆம் நாளான வியாழக்கிழமை (ஏப்.30) தீா்த்தவாரி நடைபெறும். ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சங்கரபாண்டியன், மண்டகபடிதாரா்கள் செய்திருந்தனா்.