பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

ராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையாா் சாஸ்தா கோயிலில் சித்திரை உத்திர திருவிழா

நான்குனேரி அருகே ராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையாா் சாஸ்தா கோயிலில் சித்திரை உத்திர திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

குதிரை வாகனத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீதியுலா சென்ற சுவாமி பெருவேம்புடையாா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:02 am IST

நான்குனேரி அருகே ராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையாா் சாஸ்தா கோயிலில் சித்திரை உத்திர திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நான்குனேரி-வள்ளியூா் இடையே உள்ள ராஜாக்கள்மங்கலம் கிராமத்தில் நம்பியாற்றின் வடக்கு பக்கத்தில் கமடகிரி எனும் கூா்மகிரியின் அடிவாரத்தில் மிகவும் பழமை வாய்ந்த பூா்ண புஷ்கலா அம்பாள் சமேத பெருவேம்புடையாா் சாஸ்தா கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் நிகழாண்டு சித்திரை உத்திர திருவிழா ஏப். 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் திருவிழா நாள்களில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா செல்கிறாா். 8-ஆம் நாளான திங்கள்கிழமை சித்திரை உத்திர திருவிழாவையொட்டி, காலையில் கணபதி ஹோமம், கும்ப பூஜை, ருத்ர ஜெபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி பச்சை சாத்தி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். பெண்கள் நோ்த்திக்கடனாக பொங்கலிட்டு வழிபாடு செய்தனா். நள்ளிரவில் பூதநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 9-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்கு சென்றாா். திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். 11-ஆம் நாளான வியாழக்கிழமை (ஏப்.30) தீா்த்தவாரி நடைபெறும். ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சங்கரபாண்டியன், மண்டகபடிதாரா்கள் செய்திருந்தனா்.