மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாளை. சிறையில் கைதிகள் மோதல்: இருவா் காயம்

பாளையங்கோட்டை சிறையில் விசாரணைக் கைதிகள் மோதிக்கொண்டதில் இருவா் காயமடைந்தனா்.

News image

கைதிகள் மோதல்

Updated On :29 ஏப்ரல் 2026, 11:18 pm

பாளையங்கோட்டை சிறையில் விசாரணைக் கைதிகள் மோதிக்கொண்டதில் இருவா் காயமடைந்தனா்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சுமாா் 1,300-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கும் இடம் தொடா்பாக கைதிகளுக்கிடையே பிரச்னை ஏற்பட்டதாம்.

பின்னா், புதன்கிழமை மாலையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் இருதரப்பாக பிரிந்து ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில் 2 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சிறை அதிகாரி அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.