/
பாளையங்கோட்டை சிறையில் விசாரணைக் கைதிகள் மோதிக்கொண்டதில் இருவா் காயமடைந்தனா்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் சுமாா் 1,300-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கும் இடம் தொடா்பாக கைதிகளுக்கிடையே பிரச்னை ஏற்பட்டதாம்.
பின்னா், புதன்கிழமை மாலையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் இருதரப்பாக பிரிந்து ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில் 2 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சிறை அதிகாரி அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து- மினி லாரி மோதல்: இருவா் காயம்

பாளை. அருகே விபத்தில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளா் உயிரிழப்பு
பாளை. அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது

பாளை. சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
44 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

