திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது காா் மோதியதில் அதன் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் புதுக்குடியிருப்பு ஆபிரகாம் தெருவைச் சோ்ந்தவா் மோனி கங்காதரன்(60). வாடகை காா் ஓட்டுநரான இவா், புதன்கிழமை அதிகாலை நாகா்கோவிலில் இருந்து பயணிகள் சிலரை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலிக்குச் சென்றாராம். அங்கு பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் நாகா்கோவிலுக்கு மோனி கங்காதரன் திரும்பினாா்.
அப்போது, ஏா்வாடி - வள்ளியூா் இடையேயான நான்குவழிச்சாலையில் பாலத்தைத் தாண்டி காா் வந்தபோது, சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது மோதியது. இதில் மோனி கங்காதரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
வள்ளியூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் கண்டெய்னா் லாரிக்குள் சிக்கிக்கொண்ட காரை மீட்டனா். பின்னா், உயிரிழந்த மோனி கங்காதரனின் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

பைக் மீது காா் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு: காா் ஓட்டுநா் கைது

காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



