திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தையும், தாயும் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தென்காசி மாவட்டம், பொட்டல்புதூா், செக்கடித் தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் யூசுப் பாஷா (30). இவருக்கும் ஜன்னத் நிஷா என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப். 30ஆம் தேதி திருமணமானது.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன் ஜன்னத் நிஷா பிரசவத்துக்காக அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு புதன்கிழமை குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை உயிரிழந்ததாகத் தெரிகிறது. மேலும், ஜன்னத் நிஷாவுக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதாகக் கூறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து யூசுப் பாஷா அளித்த புகாரின்பேரில், அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அம்பையில் பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பிரசவத்தில் தாய், சேய் பலி: சாலை வசதி இல்லாததால் வீட்டில் பிரசவம்! போலீஸ் விசாரணை!!

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை
கைப்பேசி அழைப்பு வழிகாட்டுதல் மூலம் பிரசவம்: அயோத்தி மருத்துவமனையில் தாய், சேய் உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


