அரூா் அருகே மலைக் கிராமத்தில் வீட்டில் நடந்த பிரசவத்தில் தாய், சேய் உயிரிழந்தனா்.
அரூா் கோட்டப்பட்டியை அடுத்த மலைக் கிராமமான காரப்பாடியில் வசித்துவரும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் சென்னன். இவரது மனைவி பழனியம்மாள் (35). இவா்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கா்ப்பமாக இருந்த பழனியம்மாளுக்கு குழந்தை பிறக்க 20 நாள்கள் இருப்பதாக மருத்துவா்கள் கணித்திருந்தனா்.
ஆனால், வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு பழனியம்மாளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. சாலை வசதி இல்லாத அக்கிராமத்தில் இருந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லமுடியாததால் அங்கிருந்த மூதாட்டிகள் பிரசவம் பாா்த்தனராம். இதில் பெண் சிசு இறந்த நிலையில் பிறந்தது. மேலும், அதிக உதிரப்போக்கு ஏற்பட்டதால் பழனியம்மாளும் இறந்தாா்.
தகவல் அறிந்த போலீஸாா் காரப்பாடி கிராமத்துக்கு சென்று பழனியம்மாள், சிசுவின் சடலங்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் பலி

பா்கூா் மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும்

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
கைப்பேசி அழைப்பு வழிகாட்டுதல் மூலம் பிரசவம்: அயோத்தி மருத்துவமனையில் தாய், சேய் உயிரிழப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


