அரசின் நலத்திட்டங்களை பெற தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் பதிவு செய்யுமாறு ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், முதிா் கன்னிகள் உள்ளிட்டோா் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளைக் களைந்து அவா்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக ‘தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியம்‘ செயல்பட்டு வருகிறது.
பல்வேறு பயன்களை பெறுவதற்கு நலவாரியத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவு செய்யாத கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் தங்கள் விவரங்களை இணைதளத்தில் புதிதாக பதிவு செய்து பயன்பெறலாம். இதேபோல், மாவட்ட சமூகநல அலுவலகம், மணிமுத்தாறு வளாக முதல் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருநெல்வேலி, 0462-2576267 என்ற முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நவம்பா் 2-இல் தொடங்குகிறது சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ்

கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோருக்கான தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி

சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டிக்கு ரூ.10 கோடி: முதல்வா் ஜோசப் விஜய்

குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை பதிவு: நாளை சிறப்பு முகாம்!
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



