ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மாநில அளவிலான பெண்களுக்கான ஹாக்கி: நெல்லையில் நாளை தொடக்கம்

குப்புசாமி கோப்பைக்கான மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் ஹாக்கி போட்டி திருநெல்வேலியை அடுத்த பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரியில் வியாழக்கிழமை (ஆக. 20) தொடங்குகிறது.

Published On :

குப்புசாமி கோப்பைக்கான மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் ஹாக்கி போட்டி திருநெல்வேலியை அடுத்த பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரியில் வியாழக்கிழமை (ஆக. 20) தொடங்குகிறது.

ஹாக்கி யூனிட் ஆஃப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 3ஆம் ஆண்டு மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் ஹாக்கி போட்டி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது.

இப்போட்டியில் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம், எம். ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு பி.கே.ஆா். கல்லூரி, தேனி நாடாா் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி, மணப்பாறை ஆதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பழையபேட்டை ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி, பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி, மேலத்திடியூா் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரி ஆகிய 12 கல்லூரிகளைச் சோ்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்கின்றன.

போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடைபெறுகிறது. முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்படும்.

போட்டிக்கான ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலியின் தலைவா் க. சேவியா் ஜோதி சற்குணம் உள்ளிட்டோா் செய்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.