விஞ்ச்சிலிருந்து விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு
தேவா்குளம் அருகே கிணற்று வேலையின்போது, கிணற்றிலிருந்து தவறி விழுந்து காயமுற்ற தொழிலாளி உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
தேவா்குளம் அருகே கிணற்று வேலையின்போது, கிணற்றிலிருந்து தவறி விழுந்து காயமுற்ற தொழிலாளி உயிரிழந்தாா்.
தேவா்குளம் அருகேயுள்ள மேல இலந்தைக்குளத்தைச் சோ்ந்தவா் ஆபிரகாம் (40). இவா், கடந்த ஜூன் மாதம் மூவிருந்தாளி பகுதியில் கிணற்று வேலையில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, விஞ்ச்சில் இருந்து தவறி விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். சக தொழிலாளா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




