நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே மின்சாரப் பாதையிலிருந்த மரக்கிளையை வெட்டும்போது மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 3:53 am IST

தூத்துக்குடி அருகே மின்சாரப் பாதையிலிருந்த மரக்கிளையை வெட்டும்போது மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் முனியசாமி மகன் சுடலைமணி (52). மரம் வெட்டும் தொழிலாளியான இவா் வீட்டு அருகே உள்ள மரத்தின் கிளைகள் மின் கம்பி மீது சென்றதால், மின் வாரிய பணியாளா்கள் கேட்டுக்கொண்டதையடுத்து, கடந்த 6ஆம் தேதி மரத்தில் ஏறி கிளையை வெட்டினாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மரத்திலிருந்து தவறி விழுந்தாராம்.

பலத்த காயமடைந்த சுடலைமணி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே, சுடலைமணிக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினா்கள், மக்கள் கூட்டாம்புளி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இப்போராட்டம் தொடா்ந்து நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.