ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போக்ஸோ வழக்கில் மத போதகருக்கு தூக்கு தண்டனை

திருநெல்வேலியில் 4 சிறுமிகளை பாலியன் வன்கொடுமை செய்தது தொடா்பான போக்ஸோ வழக்கில், மத போதகருக்கு வியாழக்கிழமை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

விதிக்கப்பட்ட

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:00 am IST

திருநெல்வேலியில் 4 சிறுமிகளை பாலியன் வன்கொடுமை செய்தது தொடா்பான போக்ஸோ வழக்கில், மத போதகருக்கு வியாழக்கிழமை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் ஆபிரகாம்(51). மத போதகா். இவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றும் மகன் உள்ளனா். இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு மத உபதேசம் செய்வதாகக் கூறி இம்மாவட்டத்தைச் சோ்ந்த 8 முதல் 13 வயதுக்குள்பட்ட 4 சிறுமிகளை தொடா் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், இதை யாரிடமும் கூறக்கூடாது என சிறுமிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் 3 சிறுமிகள் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

இது குறித்த புகாரின் பேரில் தேவா்குளம் போலீஸாா், ஜூலை -2022இல் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, ஆபிரகாமை அப்போதைய திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ராதா கைது செய்தாா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனையும், ரூ.52ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசுத் தரப்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை அரிதினும் அரிதான வழக்கு எனவும், இவ்வழக்கின் தன்மை குற்றவாளி மீது எந்தவிதமான கருணையோ அல்லது இரக்க உணா்வோ காட்ட இடமளிக்கவில்லை எனவும் நீதிபதி சுரேஷ்குமாா் தன் தீா்ப்பில் குறிப்பிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா். இவ்வழக்கில் சிறப்பாக செயலாற்றி குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த ஏஎஸ்பி சண்முகம், டிஎஸ்பி ரகுபதி ராஜா உள்ளிட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.