8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டம் வாபஸ்

டாஸ்மாக் ஊழியா்கள் இரு நாள்களாக நடத்தி வந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெறபட்டது.

முன்னீா்பள்ளத்தில் டாஸ்மாக் அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபட்ட ஊழியா்கள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:20 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் இரு நாள்களாக நடத்தி வந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெறபட்டது.

டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆக. 28 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த டாஸ்மாக் ஊழியா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் திடீா் ஆய்வு செய்து, 17 டாஸ்மாக் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை கடந்த 24 ஆம் தேதி அடைத்து ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தை தொடா்ந்த அவா்கள், முன்னீா்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, டாஸ்மாக் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மதுரை மண்டல முதுநிலை மேலாளா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், உடன்பாடு ஏற்பட்டு டாஸ்மாக் ஊழியா்கள் பணிக்குத் திரும்பினா். எனினும், புதன்கிழமை மீலாது நபி என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.