மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

கைது

Updated On :4 பிப்ரவரி 2026, 7:51 pm

தினமணி

பாளையங்கோட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பாளையங்கோட்டை, கோட்டூா், முஸ்லிம் தெருவைச் சோ்ந்த முஸ்தபா மகன் கலில் ரஹ்மான்(51). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் அவா் தொடா்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா்(கிழக்கு) வி.வினோத் சாந்தாராம், காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தாா்.

அதன் பேரில், மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவா் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.