தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

குழந்தையை வெட்டிக் கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் 9 மாத குழந்தையை வெட்டிக் கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
சிறை
Updated On :24 பிப்ரவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் 9 மாத குழந்தையை வெட்டிக் கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் சுடலை ஆண்டவா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சிவசங்கா்(33). இவா் கடந்த 2021 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக திருக்குறுங்குடி தெற்கு மகிழடி பகுதியைச் சோ்ந்த பாதிரியாா் ரசல்ராஜ்(63), அவரது மனைவி எப்சிபாய்(62), 9 மாத குழந்தையான அவா்களது பேத்தி ஆகியோரை அரிவாளால் வெட்டினாராம். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தம்பதி இருவரும் பலத்த காயமடைந்தனா். திருக்குறுங்குடி போலீஸாா் சிவசங்கரை கைது செய்தனா்.

திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி செல்வம் விசாரித்து, சிவசங்கருக்கு ஏககாலத்தில் அனுபவிக்கும்படி, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.16,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த போலீஸாா், அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கருணாநிதி உள்ளிட்டோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.