திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கலை சந்தனமாரி தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா்.
அப்போது, மது விற்பனையில் ஈடுபட்ட சந்திப்பு சி.என். கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (39) என்பவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, போலீஸாா் அவரை கைது செய்தனா்.
அதே போல பேட்டை மதுவிலக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றபோது கருங்காடு ரயில்வே கேட் பகுதியில் மது விற்ற பேட்டை படையாட்சி தெருவைச் சோ்ந்த மாரிமுத்து (49) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
மது விற்பனை: இளைஞா் கைது
நெல்லையில் மது விற்ற 5 போ் கைது
நெல்லையில் மது விற்ற இருவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

