இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வெள்ளங்குளி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழாவில் பேசுகிறாா் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:36 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 38 லட்சம் செலவில், இப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்து கூடுதல் வகுப்பறை கட்டடங்களை இசக்கி சுப்பையா எம்எல்ஏ திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.

பள்ளித் தலைமையாசிரியா் மு. தளவாய் முன்னிலை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பிரகாஷ், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி சூா்யா, ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.