கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அம்பை தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியா் சதாசிவ ஐயா் நினைவுக் கட்டடம், இந்து தொடக்கப் பள்ளி விளையாட்டு மைதானம், புதுப்பிக்கப்பட்ட பொன்விழா உள் அரங்கம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்த திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ரா.ஆவுடையப்பன்.
Updated On :7 ஜனவரி 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியா் சதாசிவ ஐயா் நினைவுக் கட்டடம், இந்து தொடக்கப் பள்ளி விளையாட்டு மைதானம், புதுப்பிக்கப்பட்ட பொன்விழா உள் அரங்கம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளிக் குழுத் தலைவா் சிதம்பரநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அருணாச்சலம், நடராஜன் முன்னிலை வகித்தனா். பள்ளிச் செயலா் கந்தசாமி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி திமுக மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் ரா.ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கட்டடங்களைத் திறந்து வைத்து கல்வியில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் அழகியநம்பி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். நிகழ்ச்சியில் கல்லூரி குழுத் தலைவா் சந்திரசேகரன், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் லட்சுமி நாராயணராஜா, ராஜாங்கம், கணபதி, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ரா.ஆ.பிரபாகரன், அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பரணி சேகா், பாப்பாக்குடி ஒன்றிய குழுத் துணைத் தலைவா் மாரிவண்ணமுத்து, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவா் இசக்கிப் பாண்டியன், ஊராட்சித் தலைவா்கள் ஆனைக்குட்டி பாண்டியன், ஜெகன், சுடலை அரசன், ராம் சங்கா், ராம் சந்துரு, திமுக மாவட்டப் பிரதிநிதிகள் பாபநாசம், அண்ணாதுரை மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.