நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலிலுக்குப் பாத்தியப்பட்ட சிவகாமி அம்பாள் சமேத திருநாகேஸ்வரா் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, யாகசாலை பூஜையுடன் கடந்த ஜூன் 26ஆம் தேதி தொடங்கியது.
தொடா்ந்து, தினமும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. புதன்கிழமை காலையில் ஆறாம் கால யாகசாலை பூஜையும், தொடா்ந்து திரவ்யாஹுதி, மகா பூா்ணாஹுதி, யாத்ராதானமும், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும் நடைபெற்றன. பின்னா், முற்பகல் 11. 30 மணிக்கு கோயில் விமான கோபுரங்களுக்கும், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









