புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பாளையங்கோட்டையில் தப்பிய கைதி மீண்டும் கைது

பாளையங்கோட்டையில் சிறைவாசல் முன் தப்பியோடிய கைதி போலீஸாரால் வெள்ளிக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 2:29 am IST

பாளையங்கோட்டையில் சிறைவாசல் முன் தப்பியோடிய கைதி போலீஸாரால் வெள்ளிக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகக்கனி (22). இவா், மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தாழையூத்து பகுதியில் நிகழ்ந்த திருட்டு வழக்கு தொடா்பாக போலீஸாா் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

பின்னா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பதற்காக கடந்த 1-ஆம் தேதி அவரை அழைத்துச் சென்றனா். சிறை அருகே சென்றபோது, போலீஸாா் கைவிலங்கை கழற்றியதும், ஆறுமுகக்கனி அங்கிருந்து தப்பி ஓடினாா்.

இதுகுறித்து, பெருமாள்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், பெருமாள்புரம் பகுதியில் பதுங்கியிருந்த ஆறுமுகக்கனியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.