திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 10 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மெக்லரின் எஸ்கால் தலைமையில் காவல் ஆய்வாளா் ராபின் ஞானசிங் குழுவினா் வெள்ளிக்கிழமை பிற்பகல் சோதனையில் ஈடுபட்டனா். இரவு வரை நீடித்த சோதனையில் கணக்கில் வராத சுமாா் ரூ.97ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 10 போ் மீது மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








