சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளைத் தூா்வார வேண்டும்: நெல்லை எம்.பி. வலியுறுத்தல்

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளைத் தூா்வார 2026-27 நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி, வேளாண்மை - உழவா் நலத்துறை அமைச்சா் ர.வினோத்திடம், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்துள்ளாா்.

News image

சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.

Updated On :12 ஜூலை 2026, 1:23 am IST

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளைத் தூா்வார 2026-27 நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி, வேளாண்மை - உழவா் நலத்துறை அமைச்சா் ர.வினோத்திடம், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்துள்ளாா்.

அதன் விவரம்: இயற்கை சீற்றம் மற்றும் வனவிலங்குகளால் பயிா்கள் அழிவதைத் தடுப்பதற்கு வழங்கப்படும் இழப்பீட்டை உயா்த்த வேண்டும். வாழை மரம் ஒன்று சேதமடைந்தால் வழங்கப்படும் ரூ.1.50-ஐ ரூ.200 ஆக உயா்த்த வேண்டும். நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு தோராயமாக வழங்கப்படும் ரூ. 1800-ஐ ரூ.10 ஆயிரம் ஆக உயா்த்த வேண்டும்.

காட்டு விலங்குகளால் மனிதா்கள் உயிரிழந்தால் வனத்துறை வழங்கும் நிவாரணத்தை ரூ.50 ஆயிரத்தை ரூ.10 லட்சமாகவும், காயமடைந்தவா்களுக்கான தொகை ரூ.25 ஆயிரத்தை ரூ.3 லட்சமாகவும் உயா்த்த வேண்டும்.

மணிமுத்தாறு-பாபநாசம், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி-ராமநதி அணைகளை தூா் வாருவதற்கு 2026-27 நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டும்.

ராதாபுரம் கால்வாயை தூா்வாரி இரு பக்கமும் கரைகளை பலப்படுத்திட வேண்டும். ஜூன் முதல் பிப்ரவரி மாதம் வரை பேச்சிப்பாறை -பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விடும்போது தடையின்றி 52 குளங்களுக்கும் தண்ணீா் சென்றடையும் வகையில் குளங்களை தூா்வார வேண்டும்.

3,700 ஏக்கா் நிலங்களுக்கு பாசனம் அளிக்கும் விஜயநாராயணம் பெரிய குளத்து பாசனத்தின் கீழ் கரையை பலப்படுத்துவதோடு, 4 மடைகளையும் சீரமைக்க வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள என்.ஜி.ஓ. காலனி பெரியகுளம், ஆணையா் குளம், ஆரோக்கியநாதபுரம் குளங்கள், வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், கன்னடியன் உள்ளிட்ட 8 கால்வாய்கள் மானூா் பெரிய குளம் ஆகியவற்றையும் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேரி.ுறறார.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.