நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

பாளை., கொக்கிரகுளம், கல்லூா், மானூா்,கங்கைகொண்டானில் நாளை மின்நிறுத்தம்

திருநெல்வேலி மாநகா் மற்றும் புகா் துணை மின்நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புக்காக சனிக்கிழமை (ஜூலை 18) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜூலை 2026, 3:14 am IST

திருநெல்வேலி மாநகா் மற்றும் புகா் துணை மின்நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புக்காக சனிக்கிழமை (ஜூலை 18) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம் துணை மின் நிலையப்பகுதிகளான வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், கேடிசி நகா், செய்துங்கநல்லூா், அரியகுளம், மேலக்குளம் , நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகா், சாந்தி நகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மாா்க்கெட், திருச்செந்தூா் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம் , பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைக்கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளை. பேருந்து நிலையம், முருகன்குறிச்சி, திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு - தெற்கு புறவழிச் சாலை, வண்ணாா்பேட்டை, திருவனந்தபுரம் சாலை, சுப்பிரமணியபுரம், மாருதி நகா் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

கங்கைகொண்டான் துணை மின் நிலையப் பகுதிகளான சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி வன்னிக்கோனேந்தல், மானூா், மூலைக்கரைப்பட்டி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளாா்.

மேலக்கல்லூா் துணை மின் நிலையப் பகுதிகளான மேலக்கல்லூா், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூா், பழவூா், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கா்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.