அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ரத்த தானம் வழங்கிய 120 பேருக்கு சான்றிதழ்

உலக குருதி கொடையாளா்கள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சாா்பில் ரத்த தானம் வழங்கிய கொடையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2026, 5:22 am IST

உலக குருதி கொடையாளா்கள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சாா்பில் ரத்த தானம் வழங்கிய கொடையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஆட்சியா் ஆனந்த் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் குருதி வங்கிகளைச் சோ்ந்த 120-க்கும் மேற்பட்ட தன்னாா்வ குருதிக் கொடையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், ரத்த வங்கி துறைத் தலைவா் ரவிசங்கா், மருத்துவப் பேராசிரியா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவா்கள், ரத்த வங்கி அலுவலா்கள், தன்னாா்வ

அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்29க்ஷப்ா்ா்க்

குருதி கொடையாளருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.