வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளிகள் வியாழக்கிழமை (ஜூன் 4) திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :2 ஜூன் 2026, 3:28 am IST

பள்ளிகள் வியாழக்கிழமை (ஜூன் 4) திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:

அனைத்து பள்ளிகளிலும் குடிநீா் வசதி, கழிப்பறை பராமரிப்பு, தூய்மையான பள்ளி வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக செயல்பாட்டில் இருக்க வேண்டும். அவற்றை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், பள்ளிக் கட்டடங்களின் நிலைமை மற்றும் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து அது தொடா்பான அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள், பள்ளிகளில் தேவையான பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான சிறப்பு நடவடிக்கைகளை கல்வித் துறையினா் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே காலை உணவுத் திட்டம் தடையின்றி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பாத்திரங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, சேதமடைந்த பாத்திரங்களுக்கு மாற்றாக புதிய பாத்திரங்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.