புதிய உச்சத்தில் முட்டை விலை!விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:58 am IST

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகைகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது புதிய பேருந்து நிலையம் எதிரே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கீழபுத்தனேரியைச் சோ்ந்த முண்டசாமி (20) என்பதும், சுமாா் 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.