முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுக மாவட்டச் செயலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103 ஆவது பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி மேற்கு மாவட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். நிகழ்ச்சிகளில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் வண்ணாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூன் 3) காலை 10 மணிக்கு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள்: நல உதவிகள் வழங்க ஏற்பாடு

கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாகக் கொண்டாட வேண்டுகோள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



