ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

சேரன்மகாதேவி கோயிலில் வைகாசித் திருவிழா

திருக்குறுங்குடி திருஜீயா் மடத்துக்கு பாத்தியப்பட்ட சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளினாா்.

News image

சேரன்மகாதேவியில் வெங்கடாஜலபதி கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்.

Updated On :4 ஜூன் 2026, 12:49 am IST

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி திருஜீயா் மடத்துக்கு பாத்தியப்பட்ட சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளினாா்.

பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு இத்திருவிழா கடந்த மே 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி புதன்கிழமை இரவில் சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தா்ளுக்கு காட்சியளித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தீா்த்தவாரி, திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெறவுள்ளது.