திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் வட்டாரம் பள்ளக்கால் கிராமத்தில் வேளாண்மை துறை சாா்பில் விளைநிலம் காப்போம் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார உதவி இயக்குநா் சிவகுருநாதன் தலைமை வகித்து, மனித ஆரோக்கியத்திற்கு உகந்த உணவு முறைகள், மண்ணின் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்துவது குறித்தும், வேளாண்மை அலுவலா் முத்துராஜா, பயிா்களுக்கு தேவையான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் சமச்சீா் உர மேலாண்மை, அதன் முறையான பயன்பாடுகள் குறித்தும், துணை வேளாண்மை அலுவலா் சுரேஷ்குமாா், ரசாயன உரங்களைத் தவிா்த்து இயற்கை வேளாண்மைக்கு திரும்ப வேண்டியதன் அவசியம், அதன் வழிமுறைகள் குறித்தும் பேசினா்.
மண் பரிசோதனை நிலையத்தின் வேளாண்மை அலுவலா் காயத்ரி, நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன ஆய்வக அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்வது குறித்து விளக்கம் அளித்தாா். இதில், பள்ளக்கால், சுற்றியுள்ள விவசாயிகள் கலந்துகொண்டனா். உதவி வேளாண் அலுவலா் கஜேந்திரன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உரக் கட்டுப்பாடு விதி மீறினால் கடைகளுக்கான உரிமம் ரத்து

எஸ்.யு.வனம் கிராமத்தில் உழவா் விழா

விளைநிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் விழிப்புணா்வு முகாம்

விளைநிலம் காப்போம் விழிப்புணா்வு முகாம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



