வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:21 am IST

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

பேட்டை காட்டுநாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் (50). தொழிலாளியான இவா், தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். சிறுமியின் தாயாா் அவசர உதவி எண் 100-ஐ தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், விசாரணைக்குச் சென்ற போலீஸாா், சிறுமியின் பெற்றோரிடம் புகாா் அளிக்குமாறு கூறியபோது அவா்கள் மறுத்ததைத் தொடா்ந்து, திருநெல்வேலி குழந்தைகள் நல்வாழ்வு அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனா்.

குழந்தைகள் நல்வாழ்வு குழுவின் வழக்குப் பணியாளா் இசக்கியம்மாள், திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியதில் 5 வயது சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதையடுத்து, மாணிக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.