திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஜே. சாக்ரடீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் துறைகளில் 2026-27 ஆம் கல்வியாண்டில் பயிலுவதற்கு கீழ்கண்ட ஒருங்கிணைந்த முதுநிலை / இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு அந்தந்த துறைகளின் வாயிலாக நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும்.
ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுநிலை பாடப்பிரிவுகள்:
வரலாறு, இயற்பியல், வேதியியல், கணிதம்
ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையம், ஆழ்வாா்குறிச்சி, கடல் அறிவியல் தொழில்நுட்ப மையம்- ராஜாக்கமங்களம்.
இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகள்: தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல்) மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு பல்கலைக்கழக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதர விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் தொலைபேசி மூலமாகவோ (0462-2321616, 2333741) அல்லது இணையதளத்தின் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக்கில் விண்ணப்பங்கள் வரவேற்பு: தகவல் கையேட்டை வெளியிட்டாா் முதல்வா் ரங்கசாமி

காரைக்குடியில் அழகப்பா பல்கலை.யின் 42-ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா

அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கை: இன்று முதல் விண்ணப் பதிவு






