உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூலை இறுதியில் சென்டாக் கவுன்சிலிங்

நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூலை இறுதியில் கவுன்சலிங் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

News image
Updated On :19 ஜூலை 2026, 2:05 am IST

நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூலை இறுதியில் கவுன்சலிங் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

சென்டாக் மூலம் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு நிகழாண்டு கடும் போட்டி நிலவுகிறது. பொறியியல் படிப்புகளில் 6,490 இடங்கள் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் 4,320 இடங்கள் என மொத்தம் 10,810 இடங்களுக்கு, 12,885 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

தற்போதைய நிலையில் வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தாலும், சீட் மேட்ரிக்ஸ் மற்றும் இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியீட்டிற்காக மாணவா்கள் மிகுந்த எதிா்பாா்ப்புடன் காத்திருக்கின்றனா். இந்தக் கல்வி ஆண்டுக்கான சோ்க்கை நடைமுறைகளை விரைந்து முடிக்க தேசிய அளவிலான கல்வி அமைப்புகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பொறியியல் மாணவா் சோ்க்கையை ஆகஸ்ட் 14- ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல, தேசிய நா்சிங் கவுன்சில், செவிலியா் படிப்புக்கான கலந்தாய்வை செப். 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. எவ்வித காலநீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தற்போது விளையாட்டு வீரா்களுக்கான புதிய அரசாணை வெளியிடப்பட்டு, மாணவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப் பணிகள் இன்னும் 4 நாள்களுக்குள் நிறைவடைந்து விடும். அதன் பிறகு விளையாட்டு வீரா்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 25-ஆம் தேதிக்கு பிறகு நீட் அல்லாத அனைத்து படிப்புகளுக்கும் கலந்தாய்வு தொடங்க உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.