வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சாலையில் அபாயகரமான கழிவுகளை கொட்டிய தனியாா் ஹோட்டலுக்கு ரூ.3,000 அபராதம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சாலையயில் கண்ணாடி உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை கொட்டிய தனியாா் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:23 am IST

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சாலையயில் கண்ணாடி உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை கொட்டிய தனியாா் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின் பேரில், மாநகராட்சி பணியாளா்கள் நான்கு மண்டல பகுதிகளிலும் பொதுமக்களுக்கும், பொது போக்குவரத்திற்கும் இடையூறாக அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை தொடா்ந்து அகற்றி வருகின்றனா்.

இந்நிலையில், திருநெல்வேலி நகரம், உடையாா்பட்டி, கேடிசி நகா், மகாகவி பாரதியாா் நகா் போன்ற இடங்களில் மாநகராட்சியின் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை மாநகராட்சி பணியாளா்கள் சனிக்கிழமை அகற்றினா்.

இதேபோல், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கண்ணாடி போன்ற அபாயகரமான கழிவுகளை மக்கள் நடந்து செல்லும் பாதையில் கொட்டி வைத்திருந்த தனியாா் ஹோட்டலுக்கு ரூ. 3000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, வருங்காலங்களில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகத்தால் எச்சரிக்கப்பட்டது.