/
திருநெல்வேலி அருகே பைக்-காா் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் செல்லப்பா. இவரது மகன் சுபீன்ராஜ் (21). கடந்த 29 ஆம் தேதி வி.எம்.சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே சுபீன்ராஜ் சென்ற பைக்கும், அவ்வழியாக வந்த காரும் மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த சுபீன்ராஜ் திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.








